crossorigin="anonymous">
உள்நாடுபொது

2022 உயர் தரப் பரீட்சை ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில்

2022 க.பொ.த உயர் தரப் பரீட்சையை இந்த வருடம் ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அத்துடன், பாடசாலை சீருடை விநியோகம் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேனவும் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்

2021 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை தொடர்பான அனைத்து நடைமுறைப் பரீட்சைகளையும் ஜூலை மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவு செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 44 = 45

Back to top button
error: