crossorigin="anonymous">
உள்நாடுபொது

புதிய பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கையின் புதிய பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (02) கொழும்பு, கோட்டை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களினால் 2022 ஜூன் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாகவும் இராணுவ தளபதியாகவும் பதவியாற்றி வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (31) 23 வது இராணுவ தளபதியின் கடமைகளிலிருந்து விடுகை பெற்றார்.

உரிய பதவிகளில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் முப்படைகளின் தலைவர், ஜனாதிபதி அவர்களைச் சந்திப்பது சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 70 − 62 =

Back to top button
error: