crossorigin="anonymous">
உள்நாடுபொது

சிறுமி ஆய்ஷாவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

மரணம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்

அட்டுளுகம பிரதேசத்தில் நேற்று முந்தினம் (27) முற்பகல் காணாமல் போன பாத்திமா ஆய்ஷா எனும் சிறுமி நேற்று (28) சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் அட்டுலுகம மக்கள் குழந்தை ஆயிஷாவின் இழப்பிற்கு எதிராகவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும், குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரியும் ,போதைப் பொருள் வியாபாரிகளை கைது செய்யுமாறும் போதைப் பொருளிற்கு எதிராகவும் இன்று (29) ஆர்ப்பாட்டாமொன்றை முன்னெடுத்துள்ளனர்

அட்டுளுகம கல்வீட்டுமண்டி அக்ரம் அவர்களின் 9 வயதான மகள் பாத்திமா ஆய்ஷா நேற்று முன்தினம் (27) காலை 10 மணியளவில் தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள கடைக்கு சென்று பொருள் கொள்வனவு செய்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போன சிறுமியே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

காணாமல் போன சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நில பிரதேசத்திலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 9 வயதான ஆய்ஷா அட்டுலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்தார்

சிறுமி நேற்று (28) சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் குறித்த மரணம் தொடர்பான விசாரணை, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் அப்பிரதேசத்தை மாத்திரமன்றி, முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 83 − 75 =

Back to top button
error: