crossorigin="anonymous">
உள்நாடுபொது

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நடைபெறாது

இலங்கை லிற்றோ நிறுவனம் இன்றும் (27) உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நடைபெறாது என தெரிவித்துள்ளது.

7,500 மெட்ரிக் தொன் கொண்ட இரண்டு எரிவாயுக் கப்பல்கள் தற்போது இலங்கையை நோக்கி வந்துகொண்டிருப்பதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது

ஒரு கப்பல் இன்று (27) நாட்டை வந்தடையும் என்றும், மற்றைய கப்பல் ஞாயிற்றுக்கிழமை (29) நாட்டை வந்தடையும் என்றும் லிற்றோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இலங்கைக்கு வரும் இரு எரிவாயுக் கப்பல்களுக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த கப்பல்கள் நாட்டை வந்தடைந்த மறுதினம் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: