crossorigin="anonymous">
உள்நாடுபொது

மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு

இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்த 09 ஆம் திகதி பதவி விலகிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று (25) மாலை 3 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி, அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு அருகில் ‘மைனா கோ கம’ மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் ‘கோட்டா கோ கம’ அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டப்பட்டிருந்தமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செட்டப்பட்டுள்ளது .

அலரி மாளிகைக்கு வந்த, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியதன் விளைவாக நாடு முழுவதும் அமைதியின்மைச் சம்பவங்கள் குறித்தும் மஹிந்த ராஜபக்‌ஷவிடம்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 17 − 11 =

Back to top button
error: