crossorigin="anonymous">
பொது

அரசியலமைப்பு 21 ஆவது திருத்த யோசனை அமைச்சரவையில்

இலங்கை அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்த யோசனை தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடி அவர்களின் யோசனைகளையும் உள்வாங்கி அந்த யோசனை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட இருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று (24) நடைபெற்றதுடன் அதில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்

அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக 21ஆவது திருத்த யோசனையை நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.

திருத்தங்கள் வழங்கப்பட்டன. இந்த திருத்தங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்தலைவர்களுக்கும் துரிதமாக வழங்கி கலந்துரையாடவும் தேவையான திருத்தங்கள் மற்றும் யோசனைகளை பெறவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அடுத்த வார அமைச்சரவையில் அவை குறித்து மீள ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் மீள இந்த விடயம் குறித்த ஆராயப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 8 = 15

Back to top button
error: