crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வு இம்மாதம் எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் காலை 8.30 மணியளவில் ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வை நடாத்தவுள்ளனர்.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் அனைத்து ஊடக நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 28 − 20 =

Back to top button
error: