crossorigin="anonymous">
உள்நாடுபொது

வீதியில் மோட்டார் சைக்கிள் திடீரன தீப்பற்றி எரிந்து சேதம்

மட்டக்களப்பு  காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (21) காலை 11.00 மணியளவில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வண்டியொன்று திடீர் என தீப்பற்றி எரிந்ததுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பொதுமக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போதிலும் மோட்டார் சைக்கிள் முற்றுமுழுதாக தீயில் எரிந்து சேதமாகியுள்ளது.

பெற்றோல் கசிவினாலேயே தீப்பற்றல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார்  சம்பவ தொடர்பாக மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + = 15

Back to top button
error: