crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கிடைக்க மேலும் காலம் செல்லலாம்

இலங்கையில் எரிவாயு நெருக்கடி நிலைமை முழுமையான தீர்வு கிடைக்க மேலும் ஒன்றரை மாதங்கள் செல்லும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

நாளாந்தம் 35,000 சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஓமானிலிருந்து எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்று (19) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தாய்லாந்து எரிவாயு நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 36 + = 37

Back to top button
error: