
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (19) வியாழக்கிழமை மற்றும் வெள்ளி (20), சனிக்கிழமை (21) ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இலங்கை முழுவதும் 27 வலயங்களாக A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், மே 19 – 21: 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
– மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
– பி.ப. 5.00 – இரவு 10.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
MNO | XYZ :
– மு.ப. 5.00 – மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள்
CC :
– மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் போதிய எரிபொருள் இன்மை காரணமாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின் வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.