crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ஏறாவூரில் பெண்களுக்கென பிரத்தியேக நூலகம்

'பாத்திமா மகளிர் நூலகம்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் பெண்களுக்கென பிரத்தியேக நூலகமொன்று நேற்று (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூரில்தான் பெண்களுக்கென இலங்கையிலேயே தனியான பொதுச் சந்தையும் உள்ளது. அதேபோல் பெண்களுக்கென தனியாக உடற்பயிற்சி ஏற்பாடுகளும் ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பாத்திமா மகளிர் நூலகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வாசிகசாலைத் திறப்பு விழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நகர சபைத் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூரின் பெண் ஆளுமைகளான பிரதேச செயலாளர் நிஹாறா, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா, பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் சிஹானா, தென்னைப் பயிர்ச் செய்கை ஆய்வு கூடப் பொறுப்பாளர் ஜாஹிறா , நகர சபை உறுப்பினர் சுலைஹா உட்பட ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், நகர சபை பிரதித் தவிசாளர் ஏ.எஸ்.எம். றியாழ் உட்பட இன்னும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 5

Back to top button
error: