crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் Tom jc மாங்கன்றுகள் வழங்கள்

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு Tom jc மாங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

சிறுதோட்ட உற்பத்தி, கரும்பு, மிளகாய், முந்திரிகை இராஜாங்க அமைச்சின் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட சுமார் 2500 கன்றுகளே இவ்வாறு 12 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய வகையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

உள்ளூர் உணவுற்பத்தி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிகழ்வில் தம்பலகாமம் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் நிஹாத் உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்..

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 53 = 59

Back to top button
error: