crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம்

ஒத்திவைக்கப்பட்ட இலங்கை பாராளுமன்றம் இம்மாதம் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது

எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய பின்னர், விசேட அனுமதியொன்றை பெற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு 12ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இம்மாதம் 6ஆம் திகதி இறுதியாக கூடி நிறைவடையும்போது, எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன் அதன் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதில் எந்த மாற்றமும் இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 31 − 30 =

Back to top button
error: