crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

அக்குறணையில் புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

கண்டி – அக்குறணை பத்ரிய்யீன் பள்ளி நிர்வாக சபையின் ஏற்பாட்டில் 2022ம் வருட புனித நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கம் அக்குறணை அஸ்ஹர் கல்லூரி மைதானத்தில் இன்று (03) காலை ஏற்பாடு செய்யப்பட்டது.

இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெருங் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் நோற்ற பின்னர் ஈதுல் பித்ர் பெருநாள் எனும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை விசேட பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது .

இலங்கை வாழ் இஸ்லாமியர்களான முஸ்லீம் பிரஜைகள் இன்றைய தினம் செவ்வாய் கிழமை புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 3 =

Back to top button
error: