crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரசாங்கத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத்

அரசாங்கத்திற்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத் ஈடுபட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரியும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கோரியும் காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் தம்மிக பிரசாத் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

No description available.

அரசாங்கத்திற்கு எதிராக 24 மணிநேர உண்ணாவிரதப்போராட்டத்தை தம்மிக்க பிரசாத் இன்று  கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து முன்னதாக கருத்துத் தெரிவித்த தம்மிக்க பிரசாத்,

நான் இன்று ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துகொள்வேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதிவழங்குமாறும் தற்போதைய பொருளாதார நெருக்கடியினனால் துயரில் சிக்கியுள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தும் விதத்தில் நான் 24 மணிநேர உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிக்கின்றேன்  என தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதிவழங்கவேண்டும் என கோரி கடந்தவாரம் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை வரை இடம்பெற்ற பேரணியை தம்மிக பிரசாத் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 − 79 =

Back to top button
error: