crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொலிஸ் ஊரடங்கு தளர்வு, அவசரகால நிலை பிரகடனம்

இலங்கை மேல் மாகாணம் முழுவதும் நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று (02) காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பிலும் நேற்று இரவு போராட்டங்கள் முன்னெடுப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இலங்கை ஜனாதிபதியினால் இலங்கையில் நேற்று ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 31ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதியின்மையை தொடர்ந்து நேற்று ஏப்ரல் 01 முதல் தற்போது இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 + = 18

Back to top button
error: