crossorigin="anonymous">
உள்நாடுபொது

பால் தேநீரின் விலை 100 ரூபாவாக அதிகரிப்பு

இன்று(20) நள்ளிரவு முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் மா மற்றும் தேயிலையின் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று (19) நடவடிக்கை எடுத்ததுடன், அதன்படி 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
இதன்படி, 400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாவாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 − = 15

Back to top button
error: