crossorigin="anonymous">
உள்நாடுபொது

தீப்பற்றிய கப்பல் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில தீப்பற்றிய கப்பல் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கின்றது. சம்பவம் தொடர்பாக இதுவரை 16 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கப்பலின் பிரதான அதிகாரிகளின் வாக்குமூலங்கள் இதில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கப்பலில் கொள்கலன்களை உள்வாங்குவதற்கு அவரே பொறுப்பாளராக செயல்பட்டுள்ளார்.

கப்பலில் ஏற்றப்பட்ட இரசாயனப் பொருட்கள் பற்றியும் விசாரணைகள் இடம்பெறுகின்றன குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகள் கப்பலுக்கு சென்று இது பற்றி நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 29 − 20 =

Back to top button
error: