crossorigin="anonymous">
பொது

வடக்கில் ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் பதிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை (மே 17) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை இதுவேயாகும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 976 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 117 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 66 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 33 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேரும் வவுனியா மாவட்டத்தில் 6 பேரும் மன்னார் மாவட்டத்தில் 5 பேரும் என 117 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 960 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட உடனடி அன்டிஜன் பரிசோதனையில் 261 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 84 − = 83

Back to top button
error: