crossorigin="anonymous">
உள்நாடுபொது

சீரற்ற காலநிலை கொழும்பு சிலாபம் வீதியின் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன

இலங்கையில் சீரற்ற காலநிலையினால் பல்வேறு நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் அதிகரித்திருக்கிறது. கொழும்பு சிலாபம் வீதியின் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி 17 வயதான பாடசாலை மாணவியின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. சம்பவத்தில் காயமடைந்த இந்த மாணவியின் தாயார் தற்சமயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

களனி கங்கை, ஜின் கங்கை ,நில்வலவை கங்கை, அத்தனகல்ல ஒய ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளன இதனால் இந்த ஆறுகளுக்கு அருகில் உள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 24 மணித்தியாளங்களில் மழை பெய்யாதபட்சத்தில் நதிகளின் நீர்மட்டம் வழமையான நிலையில் காணப்படும் என்று நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 61 − 58 =

Back to top button
error: