crossorigin="anonymous">
உள்நாடுபொது

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பிணை நிராகரிப்பு

புத்தளம் மேல் நீதிமன்றம் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பிணைக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (28) புத்தளம் மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவை வழங்கினார்.

பிணை வழங்குவதற்கு சட்ட மாஅதிபர் சம்மதம் தெரிவித்த போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல என்பதனால் பிணை உத்தரவை நிராகரிப்பதாக புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 09 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை கோரிக்கையை விடுக்குமாறு நீதிபதி இதன்போது மனுதாரர் தரப்பினருக்கு அறிவித்தார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கடந்த 2020 ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 10 மாதங்களுக்கு பின்னர், அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 20ஆம் திகதி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு பிணை வழங்குவதற்கு சம்மதம் தெரிவிப்பதாக சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 5 =

Back to top button
error: