crossorigin="anonymous">
உள்நாடுபொது

முச்சக்கவண்டி 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

நுவரேலியா – அக்கரப்பத்தனை பிரதேசத்திலிருந்து ஹட்டன் நோக்கி வேகமாக வந்த முச்சக்கவண்டி சாரதியின் வேக கட்டுப்பாட்டை மீறி 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று (27) விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா பட்டல்கல பகுதியிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.

ஹட்டன் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாணைகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 90 − = 84

Back to top button
error: