crossorigin="anonymous">
உள்நாடுபொது

விமான பயணத் தடை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நீக்கம்

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை இலங்கைக்கு வரும் பயணிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த விமான பயணத் தடையை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு  தீர்மானித்துள்ளது.

இதன் படி ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டுக்கு வரும் விமானங்களில் ஒரே நேரத்தில் 75 பயணிகள் மாத்திரமே வர முடியும். அவ்வாறு வருபவர்கள் 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு சென்றவர்களாக இருக்கக் கூடாது.

அதேபோல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தொடர்ந்தும் இந்த பயணத்தடை காணப்படுகின்றது. நாட்டுக்கு வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

இலங்கை வரும் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: