crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரை – ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரையாற்றும் திகதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பொது முடக்கம் மற்றும் விதிமுறைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 − 52 =

Back to top button
error: