crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் குடியிருப்புக்குள் புகுந்த முதலையினால் பதற்ற நிலை

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா-03 சவேரியார்புரம் பகுதியில் இன்று (23) கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலையினால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் அறிவித்ததனைத் தொடர்ந்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று முதலையினை மீட்டுள்ளதுடன் உன்னிச்சை காட்டுப்பகுதியில் உள்ள குளத்தில் விடுவித்துள்ளனர். குறித்த முதலை சுமார் 6 அடி நீளமானது என குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 + = 33

Back to top button
error: