crossorigin="anonymous">
உள்நாடுபொது

சர்வகட்சி மாநாடுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைப்பு

13 ஆவது திருத்தம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வகட்சி மாநாடொன்றுக்கு நாளை (26) மாலை 05 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குறிப்பிட்டார். 13 ஆவது திருத்தம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இதனிடையே, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளாதிருக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 − = 73

Back to top button
error: