crossorigin="anonymous">
பிராந்தியம்

கலாச்சார மத்திய நிலைய கட்டிடம் கையளிப்பு

கலாச்சார அமைச்சினால் சாய்ந்தமருது வெலிவோரியன் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலைய கட்டிடத்தினை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்கள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தல் நிகழ்வு நேற்று (25) திங்கட்கிழமை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் எம்.ஐ.‍ எம். றாசிக், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் , பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன், சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.எம் .றிம்சான், கல்முனை கலாச்சார மத்திய நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல். றிஸ்வான் அவர்களும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 7 = 3

Back to top button
error: