crossorigin="anonymous">
பிராந்தியம்

மாணவியருக்கு ‘பாராளுமன்ற அறிவகம்’ நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கொழும்பு -04, முஸ்லிம் பெண்கள் கல்லூரி மாணவியருக்கு அண்மையில் இடம்பெற்றது.

இதில் பாராளுமன்ற சட்டவாக்க திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனகாந்த சில்வா பாராளுமன்ற அமர்வு தினமொன்றின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், நிர்வாகத் திணைக்களப் பணிப்பாளர் செல்வி ஜீ. தட்சனாராணி சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில் விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் நஸ்ரியா முனாஸ் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவியரும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 4

Back to top button
error: