crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

யாழில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழையினால் 55 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிலவிய காற்றுடன் கூடிய மழை தாக்கத்தின் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று முன்தினம் (13) இரவு 8 மணி முதல் 10 மணி வரை கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவியது. இதன் தாக்கத்தினால் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு மூன்று சிறு தொழில் முயற்சியாளர்கள் குறித்த கடும் காற்று மழை தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சகல பிரதேச செயலகங்கள் ஊடாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 3 =

Back to top button
error: