crossorigin="anonymous">
உள்நாடுபொது

வாரத்தில் வேலைநாட்களை 4 தினமாக குறைக்க ஆலோசனை

இலங்கை மத்திய வங்கி இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கவனத்திற்கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலை செய்யும் மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கு யோசனைகளை முன்வைத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி முன்வைத்துள்ள யோசனையில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளது

நிறுவனங்களிலிருந்து வேலைசெய்யும் பணியாளர் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமது பணிகளை மேற்கொண்டு நேரகாலத்தோடு வீடுகளுக்குச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய வங்கி குறித்த யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, தனியார் வாகன உபயோகத்தை குறைத்து பொது போக்குவரத்துக்களை முடிந்தளவு உபயோகப்படுத்துமாறு அதன் மூலம் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கவனத்திற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தவிர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு யோசனைகள் அடங்கிய பத்திரமொன்றை அமைச்சரவைக் கூட்டத்தின் போது மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 + = 40

Back to top button
error: