crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 19 செயலகப்பிரிவுகளுக்கே இந்த மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9 மணிவரை இந்த எச்சரிக்கை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சீத்தாவக்க பிரதேச செயலாளர் பிரிவிலும், காலி மாவட்டத்தில் நெலுவ, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புலத்சிங்க, மாத்தறையில் பிட்டபெத்தர, நுவரெலியாவில் வளப்பனை, இரத்தினபுரியில் அயகம மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 2 =

Back to top button
error: