crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டக்களப்பு – சித்தாண்டியில் பேரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

மட்டக்களப்பு – சித்தாண்டியில் இன்று (18) பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த பேரூந்துடன் சந்தி வெளியிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் இதன்போது படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 − = 67

Back to top button
error: