crossorigin="anonymous">
உள்நாடுபொது

4 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்த வெளிநாட்டவரொருவர் கைது

பேலியகொடை பொலிசாரினால் அத்தியடி பிரதேசத்தில் வைத்து முகநூலினூடாகப் பரிசு வழங்குவதாக கூறி 4 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்த வெளிநாட்டவரொருவர் நேற்றைய தினம் (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்யும்போது, அவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிராம் ஐஸ் போதைப் பொருளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 4 =

Back to top button
error: