crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிரசவம்

இலங்கையில் முதல் தடவையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (21) ­­­அதிகாலை பிரசவித்துள்ளார்

அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவருக்கே , ஒரே தடவையில் ஆறு குழந்தைகளை சிசேரியன் மூலம் குழந்தைகள் இன்று அதிகாலை 12.16 முதல் 12.18 மணி வரை பிறந்துள்ளன.

31 வயதான தாய் ஒருவரே 3 ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.

இவற்றில் இரண்டாவதாகப் பிறந்த குழந்தை மாத்திரம் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள தாகவும், ஏனைய குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல் தெரிவித்துள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 40 = 50

Back to top button
error: