crossorigin="anonymous">
உள்நாடுபொது

தரம் 5 மற்றும் உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கும் நிலை ஏற்படக்கூடும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன பெரும்பாலும் அடுத்த வருடம் ஆரம்பகாலம் வரை ஒத்திவைக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் நிலையிற் கட்டளைக்கு அமைவாக கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை பூர்த்திசெய்ய வேண்டும் என்பதால் மாணவர்கள் பரீட்சைக்கு தயாராக உரிய காலம் வழங்கப்பட வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கல்வி அமைச்சின் அதிகாரிகள் தொடர்ந்து பரீட்சை திணைக்களத்துடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பின்னர் அறிவிப்பார்கள் என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 + = 70

Back to top button
error: