crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்பொது

சம்மாந்துறை இளைஞர் யுவதிகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நாளை (19) ஆரம்பிக்கப்படவுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்தும் காலம், இடங்கள் கிராம சேவகர் ரீதியாக பிரிக்கப்பட்ட அட்டவணை ஒன்றினை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.

30 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதலாம், இரண்டாம் தடுப்பூசிகளை இது வரை பெற்றுக்கொள்ளாதவர்களும் தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று பெற்றுக்கொள்ளவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 1 =

Back to top button
error: