crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபர் மர்ஹூம் அஷ்ரஃப்பின் 21வது நினைவு தினம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 21வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் கல்முனை மக்கள் பணிமனையில் இன்று (16) வியாழக்கிழமை காலை சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப இடம்பெற்றது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்றது

இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தார், ஏ.சி.ஏ சத்தார், எம்.எஸ் நிசார் (ஜேபி), ஏ.எம் பைறோஸ், உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களான தேசமாணிய அல்ஹாஜ் ஏ.பி ஜெளபர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்களின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, மெளலவி.டி நெளபர் அமீன் (வாஹிதி), மெளலவி அல்ஹாஜ் எம்.எம் ஜமாலுடின்(ஹாஸிமி) கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: