crossorigin="anonymous">
உள்நாடுபொது

புதிய சட்ட மா அதிபராக சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிக்க நடவடிக்கை

பாராளுமன்ற பேரவையில் இணக்கம்

இலங்கையில் தற்போதைய சட்ட மா அதிபரின் ஓய்வைத் தொடர்ந்து புதிய சட்ட மா அதிபராக பதில் சொலிசிட்ட ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மேற்கொண்டிருந்த பரிந்துரைக்கு பாராளுமன்ற பேரவை இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற பேரவைக் கூட்டத்திலேயே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 3

Back to top button
error: