crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை முழுவதும் 10 நாட்களுக்கு முடக்க நிலை (Lockdown) அறிவிப்பு

இலங்கை முழுவதும் இன்று (20) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையான 10 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் முடக்க நிலை (Lockdown) அமுல்படுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (20) அறிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவலின் உக்கிரத்தைத் தொடர்ந்து அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்கர்கள், ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகள் விடுத்து வேண்டுகோளை அடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் (20) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட்-19 செயலணி கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 44 + = 51

Back to top button
error: