crossorigin="anonymous">
உள்நாடுபொது

கண்டி – அக்குறணை பிரதேச கர்ப்பிணி தாய்மார்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி

கண்டி – அக்குறணை பிரதேசத்திற்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சினோபார்ம் தடுப்பூசி (Sinopharm) வழங்கும் செயற்திட்டம் நாளை 18 ஆம் திகதி புதன் கிழமை அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை வளாகத்தில் மு.ப 08.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் (17) தெரிவித்தார்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொளவதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித்தாயாக இருக்க வேண்டும் என்பதுடன் கருவுற்று 03 மாதங்கள் பூர்த்தியாகி இருக்கவும் வேண்டும்

தடுப்பூசி பெற்றுக்கொளவதற்கு தடுப்பூசி நிலையத்திற்கு தேசிய அடையாள அட்டை, கிளினிக் புத்தகம், கிளினிக் புத்தகத்தின் முதல் பக்கத்தின் பிரதி ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 − = 63

Back to top button
error: