crossorigin="anonymous">
உள்நாடுபொது

இறக்காமம் பிரதேசத்துக்கு தனியான பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

இறக்காமம் பிரதேசத்துக்கான தனியான பொலிஸ் நிலையம் ஒன்றும் கிழக்கு மாகாண திணைக்கள சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா அவர்களினால் இன்று (22) திறந்து வைக்கப்பட்டது.

இறக்காமம் பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உப பொலிஸ் நிலையமாக ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்த நிலையில் தற்போது இறக்காமம் பிரதேசத்திற்கு தனியான ஒரு பொலிஸ் நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச மக்கள் சுமார் 31 வருட காலமாக 15 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தமண போலீஸ் நிலையத்தில் போக்கு வரத்து வசதி எதுவுமின்றி பெரும் கஷ்டத்திற்கு மத்தியில் தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது இறக்கத்திற்கு குறித்த போலீஸ் நிலையம் ஆரம்பித்திருப்பது இறக்காமம் பிரதேச மக்களுக்கு பெரும் வரவேற்கத்தக்கது

நிகழ்வில் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 89 − 84 =

Back to top button
error: