crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

யாழ். இடைத்தங்கல் பராமரிப்பு மையங்களுக்கு நீர் தூய்மையாக்கல் கருவிகள்

யாழ். மாவட்டத்தில் உள்ள இடைத்தங்கல் பராமரிப்பு மையங்களுக்கான ‘Reverse Osmosis’ தொழில்நுட்பத்திலமைந்த நீர் தூய்மையாக்கல் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த, இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (27) இக் கருவிகளை வட மாகாண ஆளுநர், வட மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட கட்டளை தளபதி் ஆகியோரிடம் வழங்கி வைத்தார்.

கோப்பாய், வட்டுக்கோட்டை, நாவற்குழி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் பராமரிப்பு மையங்களுக்கு சுத்தமான குடிநீரை வினைத்திறனோடு வழங்கும் நோக்குடன், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மறுசீரமைப்பு துறை, இக்கருவிகளை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 1

Back to top button
error: