crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

சந்தேக நபரை கைது செய்த 4 பொலிஸார் சுய தனிமைப்படுத்தல்

(நதீர் சரீப்தீன்)

நிவிதிகல பொலிஸாரால் நேற்று முன்தினம் (25) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரை சிறைப்படுத்துவதற்கான நீதி நடவடிக்கைகள் பொலிஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன

குறிப்பிட்ட சந்தேக நபர் கொரோனாா தொற்று நோய்க்கு உள்ளாகியிருப்பதனால் இவரோடு தொடர்பு கொண்ட நான்கு பொலிஸார் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சந்தேக நபரை கைது செய்த நிவிதிகல பொலிஸார். நீதி நடவடிக்கைகளை முன்னெடுத்து சிறைச்சாலை அழைத்துச் சென்றுள்ளனர்.சிறையில் அடைப்பதற்கு முன்னர் சந்தேக நபருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சம்பந்தப்பட்ட நான்கு பொலிஸாரையும் வீடுகளில் சுய தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 84 + = 89

Back to top button
error: