crossorigin="anonymous">
உள்நாடுபொது

சுகாதார தொழிற்சங்கங்கள் வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு

பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று(13) காலை 6.30 முதல் முதல் அரசு வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட 72 சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் (14) இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் அண்மையில் கலந்துரையாடப்பட்ட போதிலும் அது தோல்வியில் முடிவடைந்ததாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள், இரசாயன ஆய்வுகூட நிபுணர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 − 65 =

Back to top button
error: