crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மாத்தளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை பசளை மூடைகளை கைப்பற்றியது

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

மாத்தளை – வில்கமுவ பிரதேசத்தில் உள்ள மாரக என்ற இடத்தில் தனியார் கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட 1000 ற்கும் மேற்பட்ட பசளை மூடைகளை மாத்தளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை (25) கைப்பற்றியது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடத்திய சோதனையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சலுகை விலையில் வழங்கு வதற்காக ஒதுக்கப்பட்ட உர மூடைகளே கூடிய விலையில் விற்பதற்காக பதுக்கி வைக்க்கட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாத்தளை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதான அதிகாரி ரேணுகா குமாரா தலைமையிலான குழுவினரே மேற்படி முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி பசளை மூடைகள் பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு உடன் சலுகை விலையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + = 12

Back to top button
error: