crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பிலிருந்து நுவரெலியா பயணித்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

12 பேர் காயம்: வட்டவளை வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்று இன்று (01) அதிகாலை 4.30 அளவில் வட்டவளை பாடசாலைக்கு அருகில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மற்றுமொரு பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 12 பேரும் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 5

Back to top button
error: