crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர அவசர விபத்து பிரிவில் அனுமதி

கைது செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத கூட்டமொன்றின் அங்கத்தவராக செயற்பட்டமை, அரச ஊழியருக்கு குற்றவியல் அழுத்தம் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நேற்று (28) அவர் கைது செய்யப்பட்டார்.

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது குறித்து உள்நாட்டு வெளிநாட்டு ஊடக அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன

தரிந்து உடுவரகெதர கைது செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதனிடையே, ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவின் நலன் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றிரவு பொரளை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − 6 =

Back to top button
error: