
உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டப்ளியு.எம்.ஆர்..விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் மனு இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அதனை ஒத்திவைத்து நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்..துரைராஜா, ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.