crossorigin="anonymous">
உள்நாடுபொது

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் சுமார் 37,000 நிராகரிப்பு

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் 675,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் சுமார் 37,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்கட்டை அடங்கிய பாதுகாப்பு பொதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 19ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 15 − 7 =

Back to top button
error: