crossorigin="anonymous">
பொது

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு சாரதி அனுமதி அட்டைகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதி பத்திர அட்டைகள் அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட சாரதி அனுமதி பத்திர அட்டைகள் திணைக்களத்திற்கு பல மாதங்களாக கிடைக்காததால் தற்காலிகமாக செல்லுபடியாகும் அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது.

தற்காலிகமாக அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் முறையாக அட்டைகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

திணைக்களத்திற்கு 5 இலட்சம் சாரதி அனுமதி பத்திர அட்டைகள் கிடைத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 − = 22

Back to top button
error: